×

காரில் மதுபாட்டில் கடத்திய போலி நிருபர், ஏட்டு கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் போலீசார் மூலக்கடை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரின்  உள்பகுதி மற்றும் டிக்கியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தனர். இதனையடுத்து, காரில் இருந்த நபர்களை விசாரித்தபோது ஒரு நபர் நான் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறேன் என்று தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளார். மேலும் ஒருவர் நான் பத்திரிக்கையில் பணிபுரிகிறேன், என அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.அதில், கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த பிரபாகரன் (43) என்பவர், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்ததும், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் தெரியவந்தது. மற்றொரு நபர் திருவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (28) என்பதும் தினசரி நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். போலீசாரின் விசாரணையில் அவர் டுபாக்கூர்  நிருபர் என்பது தெரியவந்தது. மேலும், இவர்களுடன் சென்ற கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மோகன் குமார் (40) திருவேற்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (39), கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த வெங்கடேசன் (55) ஆகிய 3 பேர் என மொத்தம் 5 பேரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 208 குவாட்டர் மது பாட்டில்கள், 20 புல்  பாட்டில்கள், சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post காரில் மதுபாட்டில் கடத்திய போலி நிருபர், ஏட்டு கைது appeared first on Dinakaran.

Tags : Ledu ,Perampur ,Kodungayur ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...