×

பத்ரா

எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு,
இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள்,
ஆப்ப சோடா சேர்த்து; தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இலைகளை
நன்கு கழுவி துடைத்து வைத்துக் கொள்ளவும். சப்பாத்திக்கல்லின் மேல் ஒரு;
இலையை எடுத்து தலைகீழாக வைத்து அதன் மேல் கடலை மாவு கலவையை இலை முழுவதும்
தடவி விடவும். பிறகு மற்றொரு இலையை அதன்; மேல் அதேபோல தலைகீழாக வைத்து
மீண்டும் கடலை மாவு கலவையை இலை முழுவதும் தடவி விடவும். இப்படியாக
அனைத்து இலைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ரோல் செய்து கொள்ளவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி ரோல் செய்து; வைத்துள்ள பாத்ராக்களை வைத்து
வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் வட்டமாக கட் செய்து வைத்துக்
கொள்ளவும். கடாயில் எண்ணெய்; விட்டு கடுகு தாளித்து பிறகு எள்ளு சேர்த்து
வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள பத்ராக்களை சேர்த்து சிறிது பிரவுன் கலர்
ஆனதும் எடுத்து பரிமாறவும்.

The post பத்ரா appeared first on Dinakaran.

Tags : Badra ,
× RELATED நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பே...