×

தாராவியில் ‘காஸ்’ சிலிண்டர் வெடிப்பு: குழந்தைகள் உட்பட 17 பேருக்கு தீக்காயம்

மும்பை: மும்பையின் தாராவியில் காஸ் சிலிண்டர் வெடித்ததில், குழந்தைகள் உட்பட 17 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையின் தாராவி பகுதியில் உள்ள ஷாஹு நகரின் குடிசையில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்த தீவிபத்தில், 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘ஷாஹு நகர் பகுதியில் உள்ள குடிசைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சமையல் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. அதனால், அப்பகுதியில் இருந்த பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினோம். படுகாயமடைந்த 17 பேரை மீட்டு சியோன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களின் உடலில் 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்….

The post தாராவியில் ‘காஸ்’ சிலிண்டர் வெடிப்பு: குழந்தைகள் உட்பட 17 பேருக்கு தீக்காயம் appeared first on Dinakaran.

Tags : Tarawi ,Mumbai ,Tarawi, Mumbai ,Maharashtra State ,Cass' ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!