×

அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலையை திறந்து வைத்தல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 100 நாள் சாதனைகளை விளக்கி, கட்சியின் கொடியேற்றி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட டிடிசி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலதிபரும், ஆதனூர் ஊராட்சி கிளை கழக செயலாளருமான டி.தமிழமுதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுந்தர், ஞானப்பிரகாசம், தமிழ்ச்செல்வன், கவிக்குமார், அருணாகரன், பழனி, வெங்கடேசன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மலர்விழிதமிழமுதன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கட்சி கொடியேற்றி, அவரது திருவுருவ சிலை மற்றும் கல்வெட்டினை திறந்து வைத்தனர். பின்னர், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 5 ஆயிரம் குடும்பத்தினருக்கு தலா ரூ.2,500, அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சருக்கு வெள்ளி வீரவாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல்  நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஜெயிலுக்கு போக போவது உறுதி. தற்போது தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் திமுக ஆட்சியில் 100 நாளில் செய்த சாதனைகளை ஏற்றுக்கொள்ள முடியாத அதிமுகவினர் திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி திமுக அரசை குறை கூறுகின்றனர்.  பல தொகுதிகளில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏ உள்ளனர். எனவே அந்தந்த தொகுதியில் உள்ள ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி வெற்றி பெற  வைத்தால் மட்டுமே அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை 100% நிறைவேற்ற முடியும்.’’என்றார். இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞரணி மாணவரணி மகளிர் அணியை சேர்ந்த 5000-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்….

The post அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,N. Moe Andarasan ,Kooduvancheri ,Kanchipuram Northern District ,Kudrattur Union ,Kootuvancheri ,Adanur ,Kuttamil Scholar ,T. Moe Andarasan ,
× RELATED கூடுவாஞ்சேரியில் பயணியர்...