×

தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி

ஸ்ரீபெரும்புதூர்: படப்பை பஜார் வீதியில் சவுத் இந்தியன் தனியார் வங்கி உள்ளது. மேலும் இந்த வங்கியை ஒட்டி ஏ.டி.எம். மையமும் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருப்பதை காவலாளி பார்த்தார். மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை யில் வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். ஆனால் வங்கியில் எதுவும் எடுக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்….

The post தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,South Indian Private Bank ,Patappai Bazar Road ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...