×

அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு!: 4 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி…50க்கும் மேற்பட்டோர் மாயம்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். டென்னிசி மாகாணத்தில் கடந்த வாரம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் பல அடி அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது. சில இடங்களில் வீடுகளை கூட வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றுள்ளது. வேவர் உள்ளிட்ட நகரங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் இழுத்துசென்றுவிட்டது. வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை சற்று நின்றுள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் டென்னிசி மாகாண பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டிருக்கின்றனர். வெள்ளத்தில் அடித்து சென்றவர்களை தேடும் பணியும் முடிக்கிவிடப்பட்டிருக்கின்றது. …

The post அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு!: 4 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி…50க்கும் மேற்பட்டோர் மாயம்..!! appeared first on Dinakaran.

Tags : America ,Washington ,US ,Tennessee ,
× RELATED இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்