×

சுதந்திர தினத்தன்று பாகிஸ்தானில் பொதுவெளியில் பெண் டிக் டாக் பிரபலத்தின் ஆடைகளை களைந்து மானபங்கப்படுத்திய கும்பல்!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பொதுவெளியில் பெண் டிக் டாக் பிரபலத்தின் ஆடைகளை களைந்து மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் கடந்த 14ம் தேதி சுதந்திர தினத்தன்று, இந்த சம்பவம் நடந்துள்ளது.லாகூரில் உள்ள இஃபாளா பூங்காவிற்கு நண்பர்களுடன் சென்ற பெண் டிக் டாக் பிரபலம் ஒருவர், அங்குள்ள லாகூர் ஒப்பந்த நினைவுச் சின்னம் முன்பு நின்று டிக் டாக் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குக் கூடிய ஒரு கும்பல் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.கூட்டம் மேலும் அதிகமானதால் அந்த பெண் செய்வதறியாது திகைத்த நிலையில், அவரின் ஆடைகளை களைந்து மானபங்கப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதலின் போது, பெண்ணின் நகைகள், மொபைல் உள்ளிட்ட உடமைகளையும் அந்த கும்பல் திருடி சென்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான காட்சிகள் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். …

The post சுதந்திர தினத்தன்று பாகிஸ்தானில் பொதுவெளியில் பெண் டிக் டாக் பிரபலத்தின் ஆடைகளை களைந்து மானபங்கப்படுத்திய கும்பல்!! appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Pakistan ,Islamabad ,Tok ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா