×

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி சிறுவன் பலி: புதரில் உடல் சிக்கியது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி மேலாண்டை தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் விஷாந்த்(10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வந்தான். நேற்று தனது நண்பர்களுடன் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் புழல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் நீரில் அடித்துச் செல்லப்பட்டான். மேலும், அவனுக்கு நீச்சல் தெரியாததால் அவனது நண்பர்கள் இதை கண்டவுடன் அவனை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் வெளியே ஓடி வந்து பொதுமக்களை உதவிக்கு அழைத்தனர். பொதுமக்கள் சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. உடனே அப்பகுதி மக்கள் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும், புல்லரம்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவனின் உடலை மீட்க முடியவில்லை. இதையடுத்து, பூண்டி ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டிருந்த தண்ணீரை நிறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் 4 மணி நேரம் போராடி திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு அடித்துச் செல்லப்பட்டு புதரில் சிக்கியிருந்த சிறுவன் உடலை மீட்டனர். பின்னர் அவனது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். * பழவேற்காடு ஏரியில் மூழ்கி சிறுவன் பரிதாப சாவு பழவேற்காடு ஏரியில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் லலித்குமார்(17), இவனது நண்பர்கள் பிரித்திவிராஜ், ஆகாஷ் உள்ளிட்ட 7 பேர் தடையை மீறி நேற்று படகு பயணம் செய்தனர். பின்னர் கடலும், ஏரியும் இணையும் முகத்துவார பகுதியில் உள்ள மணல் திட்டில் 7 பேரும் இறங்கி குளித்தனர். அப்போது, லலித்குமார் ஆழமான பகுதிக்கு சென்றான். இதனால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை கண்டு சக நண்பர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் சடலத்தை மீட்டனர். பின்னர் உடன் சென்று 6 பேரையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர். புகாரின்பேரில் திருப்பாலைவனம் போலீசார் லலித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்….

The post கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி சிறுவன் பலி: புதரில் உடல் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Krishna ,Thiruvallur ,Thalakancheri meland street ,vishant ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட...