- செங்குன்றம்
- சென்னை
- ராஜ்குமார்
- விஷ்ணு நகர், வடக்கு பெரும்பாக்கம்
- சென்னை செங்குந்தரம்
- அலமதி எடப்பாளையம் பஜார்
- செங்குன்ராம்
சென்னை: சென்னை செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் விஷ்ணு நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவர் செங்குன்றம் அடுத்த அலமாதி எடப்பாளையம் பஜாரில் வெல்டிங் கடை நடத்தி வந்தார். இந்த வெல்டிங் கடையில் பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த லோகேஸ்வரி(37) பணியாற்றி வந்தார். இந்நிலையில் லோகேஸ்வரிக்கு ராஜ்குமாருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது அவரது கணவர் லட்சுமணனுக்கு தெரியவந்ததால், மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கண்டித்தார். ஆனால், லோகேஸ்வரி தொடர்ந்து வேலைக்கு சென்றதால் ஆத்திரமடைந்த லட்சுமணன் நேற்றிரவு வெல்டிங் கடைக்கு சென்று அங்கிருந்த ராஜ்குமாரை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டியதுடன், அவரது மனைவியையும் வெட்டி விட்டு தலைமறைவானார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் போலீசார் இருவரையும் மீட்டு பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராஜ்குமாரின் சடலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த லோகேஸ்வரி மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான லட்சுமணனை தேடி வருகின்றனர்….
The post செங்குன்றம் அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு கள்ளக்காதலன் படுகொலை: கணவன் வெறிச்செயல் appeared first on Dinakaran.