தென்காசி: குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சாரல் நன்றாக பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக பகல் முழுவதும் வெயில் இல்லை. வானம் எப்பொழுதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. கொரோனா தொற்று காரணமாக அருவிகளில் குளிக்க தடை நீடிக்கிறது. வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அருவிகளை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்….
The post தொடர் சாரல்மழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.