×

சத்தியமங்கலம் அருகே மலை கிராம பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் குவா…குவா…

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மலை கிராம பெண்ணுக்கு, அடர்ந்த வனத்தில் 108 ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது. சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கோட்டமாளம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேவன். விவசாயக் கூலி. இவரது மனைவி லட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று லட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. லட்சுமியை ஏற்றிக்கொண்டு  சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரி செல்வதற்காக ஆம்புலன்ஸ் புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது லட்சுமிக்கு கடுமையான வலி ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் அஜித்குமார் பிரசவம் பார்த்தார். லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயையும், சேயையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அடர்ந்த வனப்பகுதியில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் அஜித்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர் ஆகியோருக்கு லட்சுமி மற்றும் மலைகிராம மக்கள் பாராட்டு, நன்றியை தெரிவித்தனர்….

The post சத்தியமங்கலம் அருகே மலை கிராம பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் குவா…குவா… appeared first on Dinakaran.

Tags : Gua ,Sathyamangalam ,Kadampur ,Satyamangalam ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை