×

நத்தம் அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நத்தம்: நத்தம் அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம்  அருகே உள்ள சேர்வீடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னாண்டி(40). இவர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவரது வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து போலீசார் சோதனையிட்டனர். இதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கியை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த துப்பாக்கிக்கு அனுமதியில்லை என தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், சின்னான்டியை கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்….

The post நத்தம் அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Natham ,Dindigul district ,Cherveedu Budoor ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...