×

எனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு போலீஸ்காரர் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் கணவர் புகார்

சென்னை: மண்ணடி நைனியப்பன் தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த  புகார் மனுவில், ‘நான் மண்ணடியில் கூரியர்  தொழில் செய்து வருகிறேன். எனக்கும், ரூபாவதி  என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம்  நடந்தது. எங்களுக்கு 19 வயதில் ஒரு மகன் உள்ளான். என்னுடைய அலுவலகம் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு எனது  மனைவி ரூபாவதி எனது அலுவலகம் வந்து சென்றபோது, முத்தியால்பேட்டை காவல் நிலைய காவலர் பெஞ்சமின்  பிராங்க்ளின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.இந்நிலையில், கடந்த ஜூன் 6ம் தேதி   எனது மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாள். இதுபற்றி அவளிடம் கேட்டபோது, ‘முத்தியால்பேட்டை காவல்  நிலைய காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின், அடிக்கடி என்னை  லாட்ஜுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். அதனை வீடியோ  எடுத்து வைத்துக்கொண்டு, என்னை மிரட்டி வீட்டிலிருந்த ரூ.3 லட்சம், 3 சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை மிரட்டி வாங்கினார். தொடர்ந்து பணம் தராவிட்டால், அந்தரங்க வீடியோவை சமூக  வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டுகிறார்,’ என தெரிவித்தாள்.அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றேன். இதுபற்றி அறிந்த பெஞ்சமின் பிராங்க்ளின், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அதை ஏற்க மறுத்த போலீசார், என் மீது பொய் வழக்கு போட்டு விடுவேன் என்று  மிரட்டுகின்றனர். அதன் பிறகு எனது மனைவியின் செயல்பாடுகளில் சந்தேகம்  ஏற்பட்டதால், அவளது செல்போனை எடுத்து பார்த்த போது அதில் டிஸ்பிளே மற்றும் சிம் கார்டு உடைந்து இருந்தது அதை சரி செய்து பார்த்தபோது, எனது மனைவி  அடிக்கடி காவலர் பெஞ்சமின் பிராங்கிளினிடம் பேசியது தெரியவந்தது. வாட்ஸ்அப்பில் உள்ள  புகைப்படங்களை பேக்கப் செய்து பார்த்தபோது காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின்,  என் மனைவி ரூபாவதி ஆகியோரின் அந்தரங்க புகைப்படமும் கிடைத்தது. இதுபற்றி கடந்த ஜூலை 13ம் தேதி மனைவியிடம் விசாரித்தபோது, ‘நான் அவருடன் தான் இருப்பேன். அவர் ஒரு போலீஸ். அதனால் எங்கள் இருவரையும்  உன்னால் ஒன்றும் பண்ண முடியாது, என்று தகாத வார்த்தையில் பேசினாள். மேலும் கூடிய  சீக்கிரம் நானும், பெஞ்சமின் பிராங்க்ளினும் சேர்ந்து  கூலிப்படையை வைத்து உன்னை கொன்று விடுவோம், என்று மிரட்டினாள். இதனிடையே, கடந்த  14ம் தேதி பெஞ்சமின் பிராங்க்ளின் என்னை தொடர்புகொண்டு, உனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்  வீடியோவை உனது உறவினர்களிடமும், சமூக  வலைதளங்களிலும் பரப்பி விடுவேன். அவ்வாறு செய்யாமல் இருக்க எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும் என்று மிரட்டினார். ஆனால் பணம் தரமுடியாது என்று  கூறிவிட்டேன். பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும்  எனது மனைவி ரூபாவதியால் என் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து  உள்ளது. எனவே காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் என்னுடைய மனைவி  ரூபாவதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தது….

The post எனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு போலீஸ்காரர் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jayaprakash ,Nainiappan Street, Mannadi ,Chennai Police Commissioner ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...