×

23 வழக்குகளில் தொடர்புடையவன்: சென்னையில் பதுங்கியிருந்த நெல்லை பிரபல ரவுடி கைது

ஆவடி: நெல்லை மாவட்டம் பங்களா சுரண்டை வேதகோயில் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி அருள்ராஜ் (47). இவர் மீது பாவூர்சத்திரம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சுரண்டை, குரும்பூர், தூத்துக்குடி வடக்கு மற்றும் சென்னை எழும்பூர், விருகம்பாக்கம் உள்பட பல காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 23 வழக்குகள் உள்ளது.  தாழையூத்து பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் கண்ணன் (35) என்பவர் கடந்த 12ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக போலி குற்றவாகிகள் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும் உண்ைம குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி, அருள்ராஜ் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில் இரண்டு சாதியினர் இடையே கலவரம் தூண்டும் வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் நெல்லை எஸ்பி.மணிவண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தபோது அருள்ராஜ்  சென்னை அருகே அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஐ காதர் தலைமையில் தனிப்படையினர் சென்னைக்கு வந்தனர். அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ் உதவியுடன்  உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரவுடி அருள்ராஜை துப்பாக்கிமுனையில் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று காலை கைது செய்து, அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post 23 வழக்குகளில் தொடர்புடையவன்: சென்னையில் பதுங்கியிருந்த நெல்லை பிரபல ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Nellie ,Chennai Avadi ,Kozhi Arulraj ,Bangla Surandai Vedakoil Street ,Nellai District ,Chennai ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்