×

வாணியம்பாடியில் தொடர் மழை: பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளான திம்மாம்பேட்டை, புல்லூர், அலசந்தாபுரம், நாராயணபுரம், லட்சுமிபுரம், ஆவாரம்குப்பம், கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மாநில எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பனை நிரம்பி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக பாலாற்றின் கிளை ஆறுகளான அலசந்தாபுரம் மண்ணாறு மற்றும் பூதனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் இன்று காலை பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …

The post வாணியம்பாடியில் தொடர் மழை: பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : VANIYAMBHADY ,Thirupathur District ,Vaneyambadi ,Thimmampet ,Pullur ,Alasanthapuram ,Narayanapuram ,Lakshumipuram ,Awaramkuppam ,Kodayananji ,Ramanayakkanbattu ,Ambalur ,Vanyambadi ,
× RELATED திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7...