சென்னை: 5 இடங்களில் சொந்த வீடுகள் வாங்கியிருப்பதாக வந்த தகவலை பற்றி பேசியிருக்கிறார் ராஷ்மிகா. புஷ்பா 2வில் நடித்து வரும் ராஷ்மிகா, இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் மும்பை, கோவா, ஐதராபாத், பெங்களூரு, கூர்க் ஆகிய இடங்களில் சொந்தமாக ராஷ்மிகா வீடுகளை வாங்கியிருப்பதாக தகவல் பரவியது.
இது பற்றி ராஷ்மிகா கூறியது:
நான் ஒரு சமயத்தில் 5 இடங்களில் வீடு வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள். இது கூட நல்லாத்தான் இருக்கு. 5 இடத்தில் எனக்கு வீடு இருந்தால் சந்தோஷத்தின் உச்சியில் நான் பறந்து கொண்டிருப்பேன். யார் இப்படியெல்லாம் கிளப்புகிறார்கள் என தெரியவில்லை. இப்போதைக்கு எனது எண்ணம், கவனம் எல்லாமே நடிப்பின் மீதுதான். வித்தியாசமான கேரக்டர்களை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
புஷ்பா 2விலும் எனக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அனிமல் படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறேன். அந்த படமே வேறு மாதிரியாக இருக்கும். இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.