×

பெண்ணை தாக்கி நகை பறிப்பு

மாமல்லபுரம்:  மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தை சேர்ந்தவர் மரகதம் (58). தனது மகன் மற்றும் மருமகளுடன் வசிக்கிறார். நேற்று காலை மகனும், மருமகளும் வேலைக்கு சென்றனர். வீட்டில் மரகதம் தனியாக இருந்தார். அப்போது, சுமார் 30 வயது வாலிபர், பைக்கில் வந்தார். அங்கு, மரகதத்திடம் தனது செல்போனில் சார்ஜர் இல்லை. சார்ஜர் போட்டு கொள்ளவா என கேட்டுள்ளார். அதற்கு, மரகதம் சார்ஜர் தானே போட்டுக்கொள் என கூறியுள்ளார். இதையடுத்து, சார்ஜர் போடுவதுபோல் உள்ளே சென்ற மர்மநபர், அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து மரகதம் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் அலறி துடித்தார். உடனே மர்மநபர், மரகதம் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயின், கையில் இருந்த ஒன்றரை சவரன் வளையலை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மரகதத்தை மீட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர். …

The post பெண்ணை தாக்கி நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Marakatham ,Mamai village ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...