சென்னை: இயக்குனர் காயம் அடைந்ததால், சூர்யா தயாரிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அக்ஷய் குமார், இந்தி நடிகை ராதிகா நடிக்கிறார்கள். சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். சூர்யா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, சுதா கொங்கராவின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 நாளுக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். காயம் அடைந்த கையின் புகைப்படத்தை வெளியிட்டு, ‘இது எனக்கு தேவையில்லாத வேலை. இதனால் ஒரு மாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.