×

அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை!: இரண்டரை மாதங்களுக்கு பின் தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ. தனபாலை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்..!!

திருப்பூர்: தேர்தலில் வெற்றிபெற்று 72 நாட்களுக்கு பின்னர் தொகுதி பக்கம் சென்ற முன்னாள் சபாநாயகர் தனபாலை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற முன்னாள் சபாநாயகர் தனபால்,  இரண்டரை மாதங்களுக்கு பின்னர் முதல்முறையாக அன்னூர் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்கள் ஊர்களில் 7 வருடங்களாக அடிப்படை வசதிகள் கூட செய்துகொடுக்கப்படவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும் பலன் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் பொதுமக்கள் தம்மிடம் நேரடியாக வழங்கிய மனுக்களையும் எம்.எல்.ஏ. தனபால் மீண்டும் அதிகாரிகளிடமே வழங்கி சென்றதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முன்னதாக அவிநாசியில் செய்தியாளர்களிடையே பேசிய தனபால், தாம் கட்சி மாறப்போவதாக வாட்ஸ் ஆப்-ல் உலா வரும் தகவல்கள் உண்மையில்லை என்று கூறினார். …

The post அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை!: இரண்டரை மாதங்களுக்கு பின் தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ. தனபாலை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்..!! appeared first on Dinakaran.

Tags : MLA ,Dhanapal ,Tirupur ,Speaker ,Thanapal ,Danabal ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா