மும்பை: இந்திய திரையுலகின் முக்கியமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவர், மிருணாள் சென். பெங்காலி, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்கள் இயக்கியுள்ள அவர், ஒன்றிய அரசின் பத்மபூஷண், தாதா சாஹேப் பால்கே உள்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். பல்வேறு நாட்டு திரைப்பட விருதுகளை வென்றுள்ள அவர் இயக்கி, கடந்த 1969ல் வெளியான ‘புவன் ஷோம்’ என்ற படம், அவரை மிக முக்கியமான இயக்குனராக அடையாளப்படுத்தியது.
நவீன இந்திய திரைப்பட இயக்கத்தின் அடையாளமாக இப்படம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2018ல் மறைந்த மிருணாள் சென்னின் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இதை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார். மிருணாள் சென் கேரக்டரில் பெங்காலி நடிகர் சஞ்சால் சவுத்ரி நடிக்கிறார். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.