×

ஏஜென்டை கடத்தி பணம் பறித்த 4 பேர் கைது

பெரம்பூர்: பெரவள்ளூர் ராம் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வேதநாயகம்(69). தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனியில் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். வேதநாயகத்தின் முதலாளியான சுதாகருக்கும், தமீம் அன்சாரி என்பவருக்கும் ஊரப்பாக்கத்தில் இடம் வாங்கியது தொடர்பாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி தமீம் அன்சாரி, அவரது நண்பர்களான இதயதுல்லா, அன்வர் பாஷா, கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் காரில் வந்து வேதநாயகத்தை கடத்தி சென்றனர். பின்னர், வேதநாயகம் வைத்திருந்த ஏடிஎம் கார்டை பறித்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் 12000 ரூபாய் எடுத்துள்ளனர். புகாரின்பேரில் திருவிக நகர் போலீசார் ஊரப்பாக்கம் அன்ஷர் பாஷா(29), பெரும்பாக்கம் இதயதுல்லா(45), கார்த்திக் (எ) பாம் கார்த்திக்(33), பாண்டியராஜ்(49) ஆகியோரை கைது செய்தனர்….

The post ஏஜென்டை கடத்தி பணம் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Vedanayagam ,Ram Nagar 2nd Street, Pervallur ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு