- குடிநீர் - நடைபாதை நிர்வாகம்
- பெரியகுளம்
- குழாய் உடைப்பு வீணாகும் குடிநீர் - நடைபாதை நிர்வாகம்
- தின மலர்
பெரியகுளம் : பெரியகுளம் அருகே, குழாய் உடைப்பால் குடிநீர் வீணாவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, ஊராட்சி அலுவலகம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, அதில் நிலத்தடி நீரை ஏற்றி கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் தொட்டி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் விநியோகம் செய்யும் நேரங்களில், குழாய் உடைப்பில் இருந்து வீணாக தண்ணீர் வெளியேறி கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. எனவே, குழாய் உடைப்பை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்-ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.