×

துளி துளியாய்

* சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது கேப்டன் தோனி, டு பிளெஸ்ஸி இருவரும் அளித்த பேட்டிங் ஆலோசனைகள், இலங்கை தொடரில் எனக்கு உதவிகரமாக இருக்கும் என்று ருதுராஜ் கெயிக்வாட் கூறியுள்ளார்.*  ‘ஒலிம்பிக் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் போட்டியில் நான் இடம் பெற்றிருக்கும் பிரிவு சற்று சாதகமாக உள்ளது என்றாலும், மற்ற வீராங்கனைகளை குறைத்து மதிப்பிட முடியாது. போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து கூறியுள்ளார்.* இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், புள்ளிவிவர ஆய்வாளர் ஜி.டி.நிரோஷனும் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. *  விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினி 6-3, 6-0, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்….

The post துளி துளியாய் appeared first on Dinakaran.

Tags : Dhoni ,du Plessis ,CSK ,Sri Lanka ,
× RELATED பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு...