×

நான் இந்தியாவின் நீண்ட கால விருந்தினர்: தலாய் லாமா பெருமிதம்

ஐதராபாத்: திபெத் ஆன்மிக தலைவரான தலாய் லாமா, தனது 86வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினர். இதனையொட்டி பிரதமர் மோடி, அமெரிக்க தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் மற்றும் இதர நிறுவனங்கள் ஏற்பாடு செய்த காணொலி மாநாட்டில் தலாய் லாமா கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா எனது வீடு என்று எப்போதும் கூறுவேன். நான் திபெத்தில் தான் பிறந்தேன். ஆனால், எனது வாழ்வின் பெரும்பகுதியை இந்தியாவில் தான் கழித்துள்ளேன். இந்திய அரசின் விருந்தினர் என கூறிக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன். நான் இந்தியாவின் நீண்டகால விருந்தினர். இந்தியாவின் அகிம்சை மற்றும் கருணை என்ற நிலைபாடானது மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. பல கோடி மக்கள் இருந்தாலும் மத நல்லிணக்கத்துக்கான சிறந்த உதாரணம் இந்தியா. இதற்கு எந்த அரசியல் காரணங்கள் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்….

The post நான் இந்தியாவின் நீண்ட கால விருந்தினர்: தலாய் லாமா பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,Dalai Lama ,Hyderabad ,Tibet ,Prime ,Dalai ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...