×

என் உள்ளாடையை கடவுள் அளக்கிறார் பேச்சு: மன்னிப்பு கேட்டார் ஸ்வேதா

மதோஷி, அபரா கே தபாரா, மேரீடு டூ அமெரிக்கா உள்பட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் ஸ்வேதா திவாரி.  தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு தொலைக்காட்சி தொடரின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்வேதா திவாரி. எனது உள்ளாடைகளை கடவுள்தான் அளவெடுத்து வருகிறார் என்று கூறினார். அவரிடன் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத போலீஸ் நடவடிக்கை வரையும் சென்றது.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஸ்வேதா. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.  கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள என்போன்ற ஒருத்தி இதுபோன்ற கருத்துக்களை வேண்டுமென்றே கூறுவது என்பது நடக்காத ஒன்று. மேலும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. என்னுடைய செயல்பாடுகளோ வார்த்தைகளோ யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார்.

Tags : Swetha ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு