×

தனியார் நிறுவன அதிகாரியின் வீட்டை உடைத்து 40 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பாலாஜி நகரை சோ்ந்தவர் கனகராஜ். இவரது மகன் சண்முகப்பிரியன் (35). தனியார் நிறுவன துணை மேலாளர். கடந்த 2ம் தேதி காலை சண்முகப்பிரியன், குடும்பத்துடன், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அனைத்து பூட்டுகளும் உடைக்கப்பட்டு படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகைகள்,  3 கிலோ வெள்ளி பொருட்கள், ₹30 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், தடயவியல் நிபுணர்கள் வந்து, அங்கு பதிவாகி இருந்த கைரேகை எடுத்து சென்றனர். மேலும் போலீசார்,  வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post தனியார் நிறுவன அதிகாரியின் வீட்டை உடைத்து 40 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Kanchipuram ,Thimmasamudram Balaji Nagar ,Sondavar Kanagaraj ,Shanmukhapirian ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!