×

வாலிபர் சரமாரி வெட்டி கொலை: முட்புதரில் சடலம் மீட்பு்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே வாலிபர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். சடலம், முட்புதரில் மீட்கப்பட்டது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த காவித்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் குட்டி. இவரது மகன் தமிழ்வேந்தன் (26). பிரபல ரவுடி. இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை தமிழ்வேந்தன், வீட்டில்  இருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.இந்நிலையில், அதே பகுதியில் உள்ள வயல்வெளி முட்புதரில் தமிழ்வேந்தன் கொலை செய்யப்பட்டு, முகம் சிதைந்து சடலமாக கிடந்தார். நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்ததும், அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் சடலமாக கிடந்த தமிழ்வேந்தனை பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கு, சடலத்தின் அருகே காலி மதுபாட்டில்கள், டம்ளர்கள் கிடந்தன. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார்  வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தமிழ்வேந்தன் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.மாமல்லபுரம்: சென்னை காசிமேடு மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் முகேஷ் (14). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். சென்னையில், கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால், கடந்த 3 மாதத்துக்கு முன் முகேஷ், மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை, சூளேரிக்காடு குப்பத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று தங்கினான். அங்கு, பாட்டி கம்சராணிக்கு உதவியாக இருந்துள்ளான். இந்தவேளையில், சூளேரிக்காடு மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் ரவி என்பவரது படகில், அதே பகுதியை சேர்ந்த 4 பேர் நேற்று அதிகாலை 4 மணிக்கு படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். காலை 7 மணியளவில் அனைவரும் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, கரைக்கு அருகே படகு வந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு தலை கீழாக கவிழ்ந்தது. படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர்.இதை பார்த்த சக மீனவர்கள் சிலர், கடலில் நீந்தி சென்றனர். அவர்களுடன், சிறுவன் முகேஷும் நீந்தி சென்றான். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி முகேஷ், தண்ணீரில் மூழ்கினான். உடனே, மீனவர்கள் அவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் முகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஸ்ரீபெரும்புதூர்: திருப்போரூர், முள்ளிபக்கம் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (44). சமையல் மாஸ்டர். கடந்த சில மாதங்களுக்கு முன் சரவணன், ஸ்ரீபெரும்புதூர் அருகே, படப்பை அடுத்த சாலமங்கலம், லட்சுமி நகரில் குடும்பத்துடன் குடியேறினார். இந்நிலையில், நேற்று படைப்பையில் இருந்து சரவணன், சாலமங்கலம் நோக்கி பைக்கில் புறப்பட்டார். வஞ்சுவாஞ்சேரி அருகே சாலையை கடந்தபோது, ஒரகடத்தில் இருந்து படப்பை நோக்கி வந்த கார், அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.* 25 சவரன் கொள்ளைஉத்திரமேரூர் பேரூராட்சி முத்து கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் காஜாபேக் (49). இவரது மனைவி ரஹமத்பி (44). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காஜாபேக், நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஆரணியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். நேற்று மதியம் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 சவரன் நகை, ரூ.75 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post வாலிபர் சரமாரி வெட்டி கொலை: முட்புதரில் சடலம் மீட்பு் appeared first on Dinakaran.

Tags : Uttara Merur ,thornbush ,
× RELATED உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்...