×

மாமல்லபுரம் அருகே இன்று பயங்கரம்; டயர் வெடித்து சாலையோர தடுப்பில் கார் மோதியது: ஒருவர் படுகாயம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இன்று காலை புதுவை நோக்கி சென்ற ஒரு காரின் பின்பக்க டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னையில் இருந்து 8 பேர் இன்று அதிகாலை, ஒரு சொகுசு காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர். 6 மணியளவில் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் வந்தபோது, திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்தவர்கள் அலறி சத்தம் போட்டனர். இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். மற்றவர்கள் லேசாக காயத்துடன் தப்பினர். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயமடைந்தவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் வந்தவர்கள் யார் யார் என்று விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post மாமல்லபுரம் அருகே இன்று பயங்கரம்; டயர் வெடித்து சாலையோர தடுப்பில் கார் மோதியது: ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,New Delhi ,Diragaram ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...