×

பாடி அருகே பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை: மனைவி கண்முன் பயங்கரம்

அம்பத்தூர்:  பாடி அருகே பிரபல ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செயப்பட்டார். மனைவி கண் முன்னே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற கருக்கா சுரேஷ் (45), பிரபல ரவுடி. இவர் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்.கே.பி நகர் போன்ற காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி விமலா (38), பாடி இளங்கோ நகர் பகுதியில் துப்புரவு பணியாளர். இந்நிலையில் நேற்று காலை விமலா,  பாடி இளங்கோ நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது விமலாவை பார்க்க சுரேஷ் வந்துள்ளார். விமலாவும் சுரேஷும் சாலையில் நின்றபடி நேற்று மதியம்  பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சுரேசை தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து பரிதாபமாக பலியானார். தகவலறிந்து கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில்,  பணம் கொடுக்கல் வாங்கல்  தகராறு காரணமாக சுரேஷுக்கும் வேறு ஒரு தரப்பினருக்கும் இடையே மோதல் இருந்ததாகவும், அதனால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவி கண் எதிரே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post பாடி அருகே பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை: மனைவி கண்முன் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Roudy ,Badi ,Kanamudram ,Ambathur ,Rudi Nadurote ,Rowdy ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலை பறிமுதல்