×

நீர்வரத்து குறைந்ததால் அதிகாலை முதல் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி..!

தென்காசி: குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து நேற்று மாலை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து நாளிரவு முதல் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் குற்றாலத்திற்கு வந்த ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து வரும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். …

The post நீர்வரத்து குறைந்ததால் அதிகாலை முதல் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி..! appeared first on Dinakaran.

Tags : Khalhala ,Iyappa ,Kasi ,Diyappa ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...