×

தமிழக அணியுடன் ரஞ்சி கிரிக்கெட்; ஐதராபாத் ரன் குவிப்பு

ஐதராபாத்: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன் குவித்துள்ளது. உப்பல், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் இந்திரஜித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஐதராபாத் தொடக்க வீரர்களாக கேப்டன் தன்மே அகர்வால், அபிராத் ரெட்டி களமிறங்கினர். அபிராத் அவரைத் தொடர்ந்து ரோகித் ராயுடு டக் அவுட்டாகி வெளியேற, தனய் தியாகராஜன் 28 ரன், ஜாவீத் அலி 6 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஐதராபாத் 17.3 ஓவரில் 46 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், தன்மே அகர்வால் – ரவி தேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 141 ரன் சேர்த்தது. ரவி தேஜா 72 ரன் (97 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சந்தீப் வாரியர் பந்துவீச்சில் விஜய் ஷங்கர் வசம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய அகர்வால் சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன் குவித்துள்ளது (70.4 ஓவர்). தன்மே அகர்வால் 116 ரன் (210 பந்து, 14 பவுண்டரி), மிக்கில் ஜெய்ஸ்வால் 32 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தமிழக பந்துவீச்சில் சந்தீப் 3, விக்னேஷ், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது….

The post தமிழக அணியுடன் ரஞ்சி கிரிக்கெட்; ஐதராபாத் ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ranji cricket ,Tamil Nadu ,Hyderabad ,Ranji Cup Cricket Elite B division ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...