×

விவசாயி கொலை வழக்கில் கறிக்கடைக்காரருக்கு ஆயுள்: கரூர் கோர்ட் தீர்ப்பு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன் (39). விவசாயி. இவர் பங்களாபுதூரை சேர்ந்த கறிக்கடை நடத்தி வரும் மாரியப்பனிடம் (57) 5-10-2020ல் ஆடுகளை விற்பனை செய்வதாக கூறி ரூ.30 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆடுகளை பிடிக்க மாரியப்பனிடம், கைமாறாக தான் பணம் பெற்றதாகவும், ஆடுகளை தர முடியாது என்றும் கூறியுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரியப்பன், கறி வெட்டும் கத்தியால் சரவணனை குத்தினார். இதில் படுகாயமடைந்த சரவணன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து மாரியப்பனை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மாரியப்பனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சண்முசுந்தரம் தீர்ப்பளித்தார்….

The post விவசாயி கொலை வழக்கில் கறிக்கடைக்காரருக்கு ஆயுள்: கரூர் கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Life ,curry shop ,Karur ,Saravanan ,Kumaramangalam ,Kulithlai ,Banglaputur ,curry ,Karur Court ,Dinakaran ,
× RELATED கள்ளக்காதலனுடன் மனைவி எரித்து கொலை...