×

மோடியை கொல்ல ரெடியா? காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை

போபால்: மோடியை கொல்ல தயாராக இருங்கள் என்று காங்கிரஸ் தலைவர் விடுத்த அழைப்பால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா. இவர் சமீபத்தில் கட்சித்தொண்டர்கள் மத்தியில் பேசிய வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘அரசியல் சாசனத்தை காப்பாற்ற  விரும்பினால், பிரதமர்  மோடியை கொல்ல தயாராக இருங்கள்’ என்று  அந்த வீடியோவில் காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா கூறியுள்ளார். அந்தவீடியோவில் கட்சித்தொண்டர்கள் கூட்டமாக உள்ளனர். அவர்கள் மத்தியில் ராஜா படேரியா பேசும்போது,’  மோடி தேர்தல் கூட இல்லாமல் ஆக்குவார்.  மோடி மதம், ஜாதி, மொழி அடிப்படையில்  மக்களை பிளவுபடுத்துவார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மை மக்களின்  உயிர்கள் ஆபத்தில் உள்ளன. அரசியல் சாசனம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால்  மோடியை கொல்ல தயாராக இருங்கள். இங்கே கொலை என்பது தோல்வி.  மோடியை தோற்கடிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். மகாத்மா காந்தியின் அகிம்சை சித்தாந்தத்தை தான் நான் பின்பற்றுகிறேன். எனவே  சிறுபான்மையினரை பாதுகாக்க பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிப்பது அவசியம்’ என்று பேசியிருக்கிறார். மத்தியபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள பாவாய் நகரில் இருந்து  இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜா படேரியா பேசும் போது,’  கொலை  என்பது மோடிக்கு அளிக்கும் தேர்தல் தோல்வி  என்று பொருள்படும்’ என்று அவர் உடனடியாக தெளிவுபடுத்துகிறார்.ஆனால் இந்த வீடியோவை பார்த்த பல பா.ஜ தலைவர்கள் உடனடியாக பல பாஜக தலைவர்கள்  படேரியாவை  கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இதையடுத்து முன்னாள் அமைச்சரான படேரியா மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ய  அரசு உத்தரவிட்டுள்ளது….

The post மோடியை கொல்ல ரெடியா? காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Redia ,Modi ,Bopal ,Congress ,Madhiya Pradesh ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...