×

சொத்து தகராறு காரணமாக இந்தி நடிகை படுகொலை; மகனே கொன்று ஆற்றில் வீசிய கொடூரம்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை வீணா கபூரை அவரது சொந்த மகனே கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திப் படங்களிலும், டி.வி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர், வீணா கபூர் (74). மும்பையில் வசித்து வந்த அவரை, சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில், வீணா கபூர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவில் வசிக்கும் மூத்த மகன், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீணா கபூருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால், யாருமே போனை எடுக்கவில்லை. இதையடுத்து உறவினருக்கு போன் செய்த அவர், உடனே வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி சொன்னார். இதையடுத்து அந்த உறவினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அங்கு வீணா கபூர் இல்லை. இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். மும்பையில் வசித்து வரும் வீணா கபூரின் இளைய மகன் சச்சினிடம் போலீசார் அவரது தாய் குறித்து கேட்டனர். 43 வயதான சச்சினின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்த நிலையில், அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.அப்போது அவர் தனது தாயை கொடூரமான முறையில் படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது. தனது தாய் என்று கூட பார்க்காமல், பேஸ்பால் பேட் மூலம் தாயை பலமுறை தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வீணா கபூர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்ெகாண்டபோது, சொத்து தகராறு காரணமாக தனது தாய் வீணா கபூரை கொன்றதாக சச்சின் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘தாயாரின் தலையில் பேஸ்பால் பேட் மூலம் அவர் பலமுறை அடித்துள்ளார். பிறகு யாரிடமும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று, உயிரிழந்த தாயாரின் உடலை அப்புறப்படுத்தியுள்ளார். வீட்டில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு காட்டின் அருகிலுள்ள ஆற்றில் வீணா கபூரின் உடலை வீசியுள்ளார். மும்பை ஜூஹு பகுதியில் இந்த படுகொலை நடந்துள்ளது’ என்றனர். சொத்து தகராறில் வீணா கபூரை அவரது சொந்த மகனே படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீணா கபூருக்கு அப்பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இருந்துள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி சச்சின் கேட்டுள்ளார். இதற்கு வீணா கபூர் மறுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சச்சின், வீணா கபூரை பேஸ்பால் பேட் மூலம் அடித்து கொலை செய்துள்ளார். அதற்குப் பிறகு வீட்டில் வேலை செய்து வந்த சோட்டு மண்டல் என்பவரின் உதவியுடன் உடலை அப்புறப்படுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து, படுகொலை செய்யப்பட்ட வீணா கபூரின் உடலை பெட்டி ஒன்றில் வைத்துள்ளனர். அதை காரில் எடுத்துச்சென்று, மாதேரான் மலை பள்ளத்தாக்கில் ஓடும் ஆற்றில் வீசியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சச்சினை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த சோட்டு மண்டலையும் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட வீணா கபூரின் உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து சச்சின் மற்றும் வீட்டு வேலைக்காரர் சோட்டு மண்டலை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் அவர்களை வரும் 19ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், போலீசார் மாதேரான் மலை பள்ளத்தாக்கில் இருந்து வீணா கபூரின் உடலை மீட்டனர். பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. பிரேத பரிசோதனையில், சச்சின் தனது தாய் வீணா கபூரை சரமாரியாக அடித்து உதைத்து இருந்தது தெரியவந்தது. சச்சின் தனது தாயை 40 முறைக்கு மேல் பேஸ்பால் மட்டையால் அடித்துள்ளார். இதனால், எலும்புகள் நொறுங்கி வீணா கபூர் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொலையாளி சச்சின், கணித முதுகலைப் பட்டதாரி. பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ‘எனது தாய் என்னை நீண்ட காலமாக துன்புறுத்தி வந்தார். நான் அவரை எதுவும் செய்யவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக என்னைக் கோபப்படுத்த அவர் பல்வேறு முயற்சிகள் செய்தார். மும்பை ஐகோர்ட்டில் எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். நான் நீண்ட காலமாக அமைதியாக இருந்தேன். ஆனால், இறுதியில் நான் நிதானத்தை இழந்துவிட்டேன். அவரை அடித்துக் கொன்றுவிட்டேன்’ என்றார்….

The post சொத்து தகராறு காரணமாக இந்தி நடிகை படுகொலை; மகனே கொன்று ஆற்றில் வீசிய கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bollywood ,Veena Kapoor ,
× RELATED ‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில்...