×

பெரம்பலூரில் அரசு பேருந்தில் வாலிபர் தவறவிட்ட ஹேண்ட்பேக்-2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்

பெரம்பலூர் :  விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி மகன் தென்றல்(28). இவர் நேற்று அதிகாலை சுமார் 3.37 மணியளவில் பெரம்பலூர் ஹைவே பேட்ரோல் போலீஸ் செல் நெம்பருக்கு போன் செய்துள்ளார். அதில் தான் விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தை சேர்ந்த சாரங்கபாணி மகன் தென்றல் எனவும், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலத்திலுள்ள டயர் தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருவதாகவும், வேலைக்கு வருவதற்காக தனது ஊரிலிருந்து பெரம்பலூர் செல்வதற்காக சென்னை-மதுரை செல்லும் அரசு பஸ்சில் வந்ததாகவும், பஸ் விக்கிரவாண்டி ஓட்டலில் டீ குடிக்க இறங்கியபோது, TN-57- N 2571 என்ற அரசு பஸ்சில் தனது பை, உடமைகள் மணிபர்ஸ், ஏடிஎம் கார்டு, ஐடி கார்டு, ஆதார் கார்டு ஆகியவைகளை விக்கிரவாண்டியில் 3.30மணிக்கு தவறவிட்டதாகவும், இந்நேரம் பெரம்பலூர் மாவட்டம் நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்த எண் கொண்ட அரசு பஸ்சில் இருந்து பெற்றுத் தரும்படியும் கெஞ்சியுள்ளார்.இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஹைவே பேட்ரோல் நெம்-1 டீமைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ ஜெயராமன், போலீஸ் சக்திவேல் ஆகியோர் விரைந்துவந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர்ப் பந்தல் தனியார் கலைக்கல்லூரி முன்பு அந்த அரசு பஸ்சினை மறித்து பார்த்த போது தென்றல் அமர்ந்து வந்த சீட்டில் அவரது ஹேண்ட் பேக் இருந்ததை பெற்றுக் கொண்டனர். பிறகு எஸ்எஸ்ஐ ஜெயராமன் சம்மந்தப்பட்ட பஸ் கண்டக்டரிடம் பஸ் புறப்படும்போது பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்துவிட்டனரா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். பலர் பத்திரங்களை, சான்றிதழ்களை, பணத்தை விட்டுவிட்டு பதறுவதை நினைத்து பார்த்து மனிதாபிமானத்துடன் பணியாற்றுங்கள் எனக் கேட்டு கொண்டு பஸ்சை அனுப்பி வைத்தனர். பிறகு ஹேண்ட் பேக்கை தவறவிட்ட தென்றலை வரச்சொல்லி அதிகாலை 5 மணியளவில், ஹேண்ட் பேக்கை ஒப்படைத்து பயணத்தின்போது உடமைகளை கவனமுடன் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்துள்ளார். தென்றல் ஹைவே பேட்ரோல் எஸ்எஸ்ஐ ஜெயராமன், போலீஸ் சக்திவேல் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.பஸ்சில் தவறவிட்ட ஹேண்ட் பேக்கை 2 மணி நேரத்தில் மீட்டு ஒப்படைத்த போலீசார்களுக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி பாராட்டு தெரிவித்தார்….

The post பெரம்பலூரில் அரசு பேருந்தில் வாலிபர் தவறவிட்ட ஹேண்ட்பேக்-2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Sarangapani ,Theral ,Annieyur ,Villupuram district ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...