×

மதுபார்ட்டியில் பயங்கரம்; வாலிபர் கத்தியால் குத்திக்கொலை: நண்பன் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மதுபார்ட்டியில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திக்கொன்ற அவரது நண்பனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் கவுதமபேட்டை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் முகேஷ்வரன்(21). இவரது நண்பர் விஜய்பிரசாந்த்(21). முகேஷ்வரனுக்கு திருமணமாகி கடந்த 10 நாட்களுக்கு முன் ெபண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் ‘நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வேண்டும்’ என்று முகேஷ்வரனிடம், விஜய்பிரசாந்த் கேட்டு வந்துள்ளார். இதனால் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் முகேஷ்வரன், நண்பர்களான விஜய்பிரசாந்த், அஜய்பாலா ஆகியோருக்கு கவுதம்பேட்டையில் உள்ள பூங்காவில் ‘மது பார்ட்டி’ வைத்துள்ளார். அங்கு நண்பர்களுடன் முகேஷ்வரனும் சேர்ந்து மது குடித்துள்ளார்.அவர்கள் போதையில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவர் அவ்வழியாக நடந்து சென்றுள்ளார். இதைக்கண்ட விஜய்பிரசாந்த், மனோஜிடம் ஏதோ பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ்வரன், ‘மனோஜ்க்கும் எனக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருக்கிறது. ஏன் அவனிடம் நீ பேசினாய்’ என விஜய்பிரசாந்த்திடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போதையில் இருந்த அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டுள்ளனர்.அப்போது விஜய்பிரசாந்த் தாக்கியதில் முகேஷ்வரனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ்வரன், தான் வைத்திருந்த கத்தியால் விஜய்பிரசாந்த்தின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் விஜய்பிரசாந்த் அலறியபடி மயங்கி விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், விஜய்பிரசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். பின்னர் அப்பகுதியில் போதையில் பதுங்கியிருந்த முகேஷ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான விஜய்பிரசாந்த் புதிய வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் இன்று காலை கிரகப்பிரவேசம் நடக்க இருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி கதறி அழுதனர். குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post மதுபார்ட்டியில் பயங்கரம்; வாலிபர் கத்தியால் குத்திக்கொலை: நண்பன் கைது appeared first on Dinakaran.

Tags : Madhubardi ,Tirupattur ,Thirupatur ,Thirupathur Gautamapet ,Madhubarty ,Waliber ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...