- வியாசர்பாடி
- பெரம்பூர்
- ஸ்ரீ ஹஹனையம்மன் கோவில்
- வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு
- சென்னை
- திருமங்கலம் 14ம் தேதி
பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியில் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு, திருமங்கலம் 14வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சண்முகம் (36) என்பவர் தக்கராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலையில் வழக்கம் போல கோயில் நிர்வாகிகள் நடையை திறந்து உள்ளே சென்றனர். 2 உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உண்டியலில் ரூ.12,000 இருக்கலாம் என கூறப்படுகிறது. உடனே இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் சண்முகம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கோயிலின் பின்புறம் உள்ள சுவற்றின் மீது 2 பேர் ஏறி குதித்து உண்டியலில் பணத்தை திருடுவது தெரிய வந்தது. அந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்….
The post வியாசர்பாடியில் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு appeared first on Dinakaran.