×

மோடி குறித்து சர்ச்சை பதிவு: திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் மீண்டும் கைது

அகமதாபாத்: சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் பதிவிட்ட திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே  சமீபத்தில் டிவிட்டரில் பதிவிடுகையில், குஜராத், மோர்பி பால விபத்து குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்ய ரூ.30 கோடி செலவிடப்பட்டுள்ளது.  இது  பலியானவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை விட அதிகம் என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குஜராத் போலீசார் நேற்று முன்தினம் கோகலேவை கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பிறகு மீண்டும் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது….

The post மோடி குறித்து சர்ச்சை பதிவு: திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் மீண்டும் கைது appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,Ahmedabad ,Spokesperson ,Saket ,Modi ,Dinakaran ,
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...