சென்னை: திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட தாங்கல் மின்மயான பூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், பொதுமக்கள் கோட்டம்-71, எம்பிஎம் தெரு மின் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-67, தாங்கல் மின்மயான பூமியின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 03.12.2022 முதல் 28.12.2022 வரை இயங்காது.எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் திரு.வி.நகர் மண்டலம் கோட்டம்-71, எம்பிஎம் தெருவில் உள்ள மின்மயான பூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது….
The post பராமரிப்பு பணிக்காக தாங்கல் மயானம் மூடல் appeared first on Dinakaran.