×

பினாமி சொத்து வாங்கி குவித்த ராகிணி, சஞ்சனா

கர்நாடகாவில் போதை பொருட்கள் விற்கும் மாபியா கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் உள்ள நடிகைகள் ராகிணி, சஞ்சனா கல்ராணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதில், இவர்கள் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை பினாமி பெயரில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாங்கி குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் நடக்கும் போதை விருந்துகளுக்கு இந்தியாவில் இருந்து விவிஐ.க்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களை அழைத்து செல்லும் தொழிலில் ஈடுபட்டு வந்த வைபவ் ஜெயினை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். நடிகைகள் ராகிணி, சஞ்சனாவின் போலீஸ் காவல் நாளையுடன் முடிகிறது. இருவரும் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால், மேலும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Sanjana ,Benami ,
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’