×

மாதவரம் அருகே ரெட்டேரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

புழல்: சென்னை மாதவரம் அருகே ரெட்டேரியில் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மிதப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செங்குன்றம் தீயணைப்பு படையினருடன் போலீசார் விரைந்து சென்றனர். ஏரியில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த ஆணின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அந்த சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த ஆணின் சட்டையில் இருந்த ஆவணங்களை வைத்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அவர் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சரவணன் (44) எனத் தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாக எய்ட்ஸ் மற்றும் தொழுநோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் கடும் மனஉளைச்சல் அடைந்த சரவணன் நேற்று ரெட்டேரியில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர் தற்கொலையில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்….

The post மாதவரம் அருகே ரெட்டேரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mathavaram ,Madavaram, Chennai ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...