×

தள்ளுவண்டி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பாடி புதூர் நகர் பகுதியை சேர்ந்தவர் அகமது (35). இவர், தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி மற்றும் சுண்டல் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த மர்ம நபர், ஓசியில் போண்டா, பஜ்ஜி, சுண்டல் கேட்டுள்ளார். அதற்கு அகமது, ‘‘பணம் கொடுத்தால்தான் தருவேன்’’ என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர், ஆடையினுள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வெட்டிவிடுவேன் என்று மிரட்டி, அகமது வைத்திருந்த ரூ.500ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். புகாரின்படி, ஜெ.ஜெ. நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பிரபல ரவுடி வினோத் (எ) வால் வினோத் (26), அகமதுவை தாக்கி பணம் பறித்து தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை தேடிவந்தனர். இந்நிலையில், சென்னை முகப்பேர் இளங்கோ நகர் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி வினோத்தை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post தள்ளுவண்டி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Roudy ,Ahmed ,Chennai ,Mukhaber ,Badi Pudur Nagar ,Dinakaran ,
× RELATED கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில்...