×

உனக்கு சிறகுகள் தர எண்ணுகிறேன்; மகனுக்கு ஜெனிலியா எழுதிய உருக்கமான கடிதம்

செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வந்தபிறகு கடிதம் எழுதுவது பெரும்பாலும் குறைந்துவிட்டது. தற்போது கடிதத்தை டிஜிட்டல் வடிவில் பலர் எழுத தொடங்கி உள்ளனர். தனது மகன் ரியான் பிறந்த தினத்தை கொண்டாடிய நடிகை ஜெனிலியா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில்,’ இப்போதுள்ள குழந்தை தோற்றத்திலேயே எப்போதும் தங்கள் குழந்தை இருக்க வேண்டும் என பல பெற்றோர்கள் எண்ணுவார்கள்.

ஆனால் நான் அப்படி இல்லை.. உனது ஒவ்வொரு வயது வளர்ச்சியையும் கண்டுகளிக்க விரும்புகிறேன். ஒரு இளைஞனாக நீ வளர்வதை நான் பார்க்க ஆசைப்படுகிறேன். நீ பறப்பதற்காக உனக்கு நான் சிறகுகள் தர எண்ணுகிறேன். அத்துடன் உனக்கு கீழாக காற்றாக இருந்து உயர்த்திப்பிடிக்க எண்ணுகிறேன். வாழ்க்கை கடினமானது. ஆனால் அதைவிட நீ கடினமானவன்.

என்றைக்கும் நீ உன்னை நம்ப வேண்டும்.  பின்னால் என்ன நடக்குமோ என்று கவலை தேவையில்லை. ஏனென்றால் நான் உன்னை முழுவதுமாக நம்புகிறேன். ஒன்றை மட்டும் நீ என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உன்னை நான் என்றைக்கும் நேசிக்கிறேன். என் வாழ்வில் மிகச் சிறந்த தருணம் நீ எனக்கு கிடைத்ததுதான். எனக்கு தாய் என்ற அந்தஸ்தை தந்த முதல் பிள்ளை நீதான். இவ்வாறு ெஜனிலியா கூறியிருக்கிறார்.

Tags : Genelia ,
× RELATED சித்தார்த்தை 17 வருடத்துக்கு பிறகு...