×

ரவுடிக்கு 321 நாள் சிறை

அண்ணாநகர்: கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ரகு (20). இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த வருடம் அண்ணாநகர் துணைஆணையர் விஜயகுமாரிடம், திருந்தி வாழப்போவதாக கூறி பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். ஆனால், அதை மீறி கடந்த 2 தினங்களுக்கு முன், மதுரவாயல் பகுதியில் கார் பேட்டரி திருடிய வழக்கில் போலீசார் ரகுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். நன்னடத்தை விதிமீறி குற்றச்செயலில் ஈடுபட்டதால், ரகுவை 321 நாட்கள் சிறையில் அடைக்க கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் கோயம்பேடு துணை ஆணையருக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின்படி, போலீசார் ரகுவை கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்….

The post ரவுடிக்கு 321 நாள் சிறை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Raghu ,Nelkunram ,Koyambedu ,Dinakaran ,
× RELATED சாரம் சரிந்து தொழிலாளி பலி தனியார்...