×

பாடல் வரியிலிருந்து வந்த கதையில் வாணி

ரஜினி வசனம் முதல் வடிவேலு பேசிய வசனம் வரை படங்களுக்கு டைட்டில் ஆகியிருக்கிறது. தற்போது பாடல் வரியிலிருந்து மிஸ்டர் டபிள்யூ என்ற படம் உருவாகிறது. எஸ்.பி.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் பற்றிய இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறும்போது, ‘எத்தனையோ கதைகள் எங்கிருந்தெல்லாமோ உருவாகிறது.

கவிஞர் வைரமுத்து எழுத ஏஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வெளியான, ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலில் வரும் ‘வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி ‘என்ற பாடலில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கதாநாயகனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை காமெடி கலந்து சொல்கிறது. தமிழ்-நிரன்சந்தர் ஒளிப்பதிவு. மிஸ்டர் சக்தி தயாரிக்கிறார். அருள்கோவன் இணை தயாரிப்பு. இதில் மேலும் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், வி.ஜே.சித்து, அனுபாமா பிரகாஷ், உள்ளிட்ட பலர் நடிகின்றனர். சென்னை, பெங்களூரில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார் இயக்குனர்.

Tags : Vani ,
× RELATED தனது தந்தைக்கு தாமதமாக விருது தரப்பட்டுள்ளது: நரசிம்மராவ் மகள் வருத்தம்