×

பெண்ணிற்கு பாலியல் தொல்லை துணை பேராசிரியர் கைது

ஆலந்தூர்: அடையாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில், உதவி கமிஷனர் பிராங்க் டி ரூபனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், மடிப்பாக்கம் ராம் நகரில் தான் மொபட்டில் சென்றபோது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர் என் வாகனத்தில் இடித்து கீழே தள்ளிவிட்டு, தனக்கு உதவுவது போல் நடித்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அப்போது, தடுத்ததால் என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி விட்டு சென்றார். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில், பாலியல் தொல்லை தந்த நபர் வேளச்சேரியை சேர்ந்த தமிழ்செல்வன் (35) என்றும், இவர் தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக வேலை செய்து வருவதும், குடிபோதையில் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து, அவரை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பெண்ணிற்கு பாலியல் தொல்லை துணை பேராசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Alanthur ,Adiyadaram ,Assistant Commissioner ,Frank D. Ruben ,Fold ,Dinakaran ,
× RELATED கட்டிட அனுமதி மீறியதாக கூறி அதிமுக...