×

சமந்தாவுக்கு சைதன்யா ரசிகர்கள் கண்டனம்

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் கெட்டுப்போவதில்லை என்ற பார்முளாவில் தங்கள் வாழ்க்கையை இருவரும் சந்தோஷமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர். தற்போது சைதன்யா ரசிகர்கள் கல் எறிய துவங்கி உள்ளனர்.
நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் நாயின் கழுத்தில், ‘நெம்பர் 1 ஹஸ்பண்ட்’ (முதல் கணவர்) என்று எழுதிய பேட்ச் அணிவிக்கப்பட்டிருந்தது.

அதைக் கண்டு சைதன்யாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர். ‘பொது வெளியில் கணவரை பற்றி மரியாதையாக பேச கற்றுக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் தந்திருக்கின்றனர். அதேபோல் சில தினங்களுக்கு முன் டிவி. நிகழ்ச்சி ஒன்றில் சமந்தாவிடம்  பெட்ரூம் ரகசியம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர்,’ என் கணவர் சைதன்யாவுக்கு முதல் மனைவி அவரது  தலையணைதான்.

தலையணை அருகில் வைத்துக்கொள்ளாமல் அவர் தூங்குவதில்லை’ என்று குறும்புத்தனமாக பதில் அளித்தார். சமந்தா தன்னைப்பற்றி கமென்ட் அடிக்கும்போதெல்லாம் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டு நகர்ந்து செல்கிறார் கணவர் நாக சைதன்யா. ஆனால் சமந்தாவின் கமென்ட்டை சைதன்யா ரசிகர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டு சமந்தாவிடம் மல்லுகட்டத் தொடங்கி உள்ளனர்.

Tags : Chaitanya ,fans ,Samantha ,
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா