×

லாரியில் இருந்து பேட்டரி திருடியவர்களுக்கு வலை

தண்டையார்பேட்டை: ராயபுரம் வெங்கடேசன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவர் சொந்தமாக ட்ரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவரிடம் திருவெற்றியூரை சேர்ந்த விநாயகம் (40) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு காசிமேடு எஸ்எம் செட்டி தெரு சர்வீஸ் சாலையில் லாரியை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை பார்த்தபோது லாரியின் கதவை உடைத்து உள்ளே இருந்து பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார்.இதுகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் விநாயகம் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் பேட்டரி திருடர்களை தேடி வருகிறார்கள். தொடர்ந்து இதுபோல் நிறுத்திவிட்டுச் செல்லும் லாரிகளில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவு இந்த பகுதியில் நடைபெறுகிறது என்று லாரி டிரைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்….

The post லாரியில் இருந்து பேட்டரி திருடியவர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Prakash ,Rayapuram ,Venkatesan ,Thiruvettiyur ,Dinakaran ,
× RELATED ஒருவரது தனிப்பட்ட வாழ்விற்குள்...