பிறந்தவுடன் குழந்தையை புகைப்படம் எடுப்பதை சென்டிமென்ட்டாக பலரும் தவிர்ப்பது வழக்கம். நடிகைகள் சமீரா ரெட்டி, எமி ஜாக்ஸன் தங்களுக்கு குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுத்து நெட்டில் வெளியிட்டு பழைய சென்டிமென்ட்டை உடைத்தனர். இந்நிலையில் சமீரா கைக்குழந்தையுடன் விபரீத விளையாட்டு நடத்தியிருக்கிறார். சமீபத்தில் கர்நாடாகாவிற்கு தனது 2 மாத கைகுழந்தையை தூக்கிக்கொண்டு வந்தவர்.
இடுப்பில் தொட்டில் கட்டி குழந்தையை வைத்துக்கொண்டு அங்கிருக்கும் முல்லயனாகிரி சிகரத்தில் மளமளவென ஏறத் தொடங்கினார். அந்த சிகரம் 6300 அடி உயரம் கொண்டது. சிகரத்தின் உச்சியை அடையும் முயற்சியுடன் ஏறியவர் சிறிது உயரம் ஏறியதும் மூச்சுவிட சிரமப்பட்டார். சமாளித்து இன்னும் சிறிது தூரம் ஏறியதும் அவருக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சு திணறல் வந்துவிட்டது.
மூச்சுவிட சிரமப்பட்டவர் வேறுவழியில்லாமல் உச்சிக்கு செல்லும் முயற்சியை கைவிட்டு கீழே இறங்கினார். சமீராவுக்கே மூச்சு திணறியதென்றால் கைக்குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டிருக் கும், அதை யோசிக்க மறந்துவிட்டீர்களா என்று பலர் அவருக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றனர். இதுகுறித்து சமீரா கூறும்போது,’தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் என்பதை உணர்த்தவே இப்படி செய் தேன்.அதற்கு பல பெண்கள் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்’ என்றார்.