×

தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது

ஆலந்தூர்: ஆலந்தூர் முக்தம்ஜி தெருவில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீடு, கடந்த 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழையால், இந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் நனைந்து வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்த வீடு சாலையில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மண்டல குழு தலைவர் என்.சந்திரன், 160வது வார்டு பெண் கவுன்சிலர் பிருந்தா முரளீகிருஷ்ணன், மண்டல மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன் ஆகியோர் மாநகராட்சி ஊழியர்களுடன், வீடு இடிந்து விழுந்த இடத்திற்கு நேரில் சென்று பொக்லைன் இயந்திரத்துடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்குள் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு அங்கு போக்குவரத்து சரி செய்யப்பட்டது….

The post தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Alandur ,Dharmalingam ,Alandur Muhammji Street ,Dinakaran ,
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்